×

வீரபத்திர சுவாமி கோயில் விழா

கிருஷ்ணகிரி, ஏப்.28: வரட்டனப்பள்ளியில் வீரபத்திர சுவாமி கோயில் திருவிழா நடந்தது. பர்கூர் தாலுகா, வரட்டனப்பள்ளியில் அமைந்துள்ள வீரபத்திர சுவாமி திருக்கோயில் திருவிழா, கடந்த 24ம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. இதையொட்டி, 25ம் தேதி வரட்டனப்பள்ளியில் இருந்து ரங்கசமுத்திரம் சென்று கணபதி ஹோமம் ஆகியவை நடந்தது. இரவு பால்குட ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் ரங்கசந்திரன் கோயிலில், காலை 5 மணிக்கு தலைமீது தேங்காய் உடைத்தல், முடியெடுத்தல் ஆகியவை நடந்தது. மாலை 6 மணிக்கு, ராசுப்பள்ளி கோயிலுக்கு செல்லுதல், இரவு சேவாட்டம், கோலாட்டம் ஆகியவை நடந்தது. நேற்று காலை ராசுப்பள்ளி கோயிலில் பக்தர்களின் தலைமீது தேங்காய் உடைத்தல் மற்றும் அன்னதானம் நடந்தது. காலை 10 மணிக்கு காரகுப்பம் கோயிலுக்கு சென்று பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post வீரபத்திர சுவாமி கோயில் விழா appeared first on Dinakaran.

Tags : Veerabhatra Swamy Temple Festival ,Krishnagiri ,Varattanapalli ,Barkur taluka, Varattanapalli ,Rangasamudram ,
× RELATED காய்ந்த மாமரங்களை அதிகாரிகள் ஆய்வு